வந்தே மாதரம்!
பி.கு. செண்பகராஜ், பிரம்மா குமாரிகள், மதுரை பார்போற்றும் நம் பாரத அன்னையர்கள் #காடு வெட்டி, கஞ்சிக்கலையமிட்டு, கரை சேர்த்தவர்கள், காளையர் புகழ்காத்தவர்கள். முதல் மரியாதையாக வந்தே மாதரம் எனப் புகழ் பாடும் பூவையர்கள். அ முதல் ஃ வரை தாயே நீயின்றி இவ்வுலகில் ஒரு அணுவும், உயிர்சக்தி பெற முடியாது. தாயில்லாமல் யாருமில்லை. அன்னையே அனைத்திற்கும் ஆரம்பம். ஆரம்பமே அலைக்கழிக்கப்பட்டால், அலைகடல் தாங்கி நிற்கும் இவ்வுலகில் அமைதி அமைவது ஆச்சரியமான விசயமாகிவிடும். நம் பண்டைய பாரத பூமியில்
- Published in Article – List
அகத்தூய்மை
– பி.கு.பாலாஜி, பிரம்மா குமாரிகள், புதுக்கோட்டை சிவபுரம் என்ற கிராமத்தில் வயதான பெரியவர் ஒருவர் எப்பொழுது பார்த்தாலும் தன்னுடைய வீட்டு வாசல் அமர்ந்தபடி பகவத் கீதையை படித்துக் கொண்டே இருப்பார். சுப்பிரமணி என்ற இளைஞன் ஒருவன் பல நாட்களாக இதனை கவனித்துக் கொண்டே இருந்தான். ஒரு நாள் சுப்பிரமணி அந்த பெரியவரிடம் வந்து “தாத்தா எப்பொழுதும் இந்த புத்தகத்தையே படித்துக் கொண்டிருக்கிறீர்களே , இதை எத்தனை நாட்களாக படிக்கிறீர்கள்?” என்று கேட்டான். “ஒரு ஐம்பது ஆண்டுகளாக படித்துக்
- Published in Article – By story
மகா சிவராத்திரியின் ஆன்மிக மகத்துவம்
மதநல்லிணக்கம், உலக சகோதரத்துவத்தை வலியுறுத்தி 80வது சிவஜெயந்தி (மகா சிவராத்திரி) நல்வாழ்த்துக்கள் !! மகா சிவராத்திரியின் ஆன்மிக மகத்துவம் மகா சிவராத்திரி விழா பாரதம் முழுவதிலும் சிரத்தையோடு கொண்டாடப்படுகின்றது. இத்திருநாளில் பக்தர்கள் விரதமிருந்து முழு இரவும் கண்விழித்து சிவலிங்கத்திற்கு வில்வத்தால் அர்ச்சனை செய்து பக்தி செய்கிறார்கள். இந்தத் திருநாளை ஆன்மிக சிறப்பு உணர்ந்து கொண்டாடவேண்டுமென்றால் கடவுள் சிவனைப் பற்றியும், சிவராத்திரியை எதன் ஞாபகார்த்தமாக கொண்டாடுகின்றோம் என்பதைப் பற்றியும் தெரிந்து கொள்ள வேண்டும். இராமேஸ்வரம், கோபகேஸ்வரம், அமர்நாத், சோமநாத்,
- Published in Article – List
சிவனுடைய அடையாளங்கள் எவ்வாறு சங்கரருடைய அடையாளங்களோடு ஒத்துப் போகின்றது !
நன்றி: The World Renewal மத உலகில் ஒரு பெருங்குழப்பம் நிலவுகிறது. பலதரப்பட்ட சமய நம்பிக்கைகள் இருப்பது மட்டுமல்ல, ஒவ்வொன்றும் தாங்கள் தான் உயர்ந்தவை என்று தங்கள் அடையாளத்தை நிலைநிறுத்தி உரிமை கொண்டாடுகின்றன. ஆனால் ஒரு விஷயத்தில் மட்டும். அதாவது சங்கரர் விஷயத்தில் அடையாளத்திலேயே பெருங்குழப்பம் நிலவுகிறது. புராணங்களும், இதிகாசங்களும், வரலாற்று கதைகளும் குழப்பத்தை மேலும் அதிகப்படுத்துகின்றது. ஓவியர்களால் வரையப்படும் தேவதைகளின் உருவப்படங்களும்,கவிஞர்களின் புகழ் பாடல்களும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றது. ஏனெனில் எல்லா ஓவியர்களும், எல்லா கவிஞர்களும்
- Published in Article – List
12 ஜோதிர்லிங்கம்
சோமநாத் (குஜராத்) ஜோதிர்லிங்க வழிபாட்டுத் தலங்களில் இது முதன்மையானது. இங்கு சிவனை சோமேஸ்வரன் என்று கூறுவர். அரபிக்கடலின் கரையிலேயே இக்கோயில் அமைந்திருப்பது சிறப்பு அம்சமாகும். சோமநாத் என்றால் ஜீவாத்மாக்களுக்கு ஆன்மீக ஞானம் எனும் சோமரசத்தை அளித்து அவர்களுக்கு முக்தி, ஜீவன் முக்தி அடையும் வழியை காட்டியவர் என்பதாகும். மல்லிகார்ஜுனர் (ஆந்திரா) ஆந்திரப்பிரதேசத்தில் கர்நூல் மாவட்டத்தில் அமைந்துள்ள சிவஸ்தலம் ஸ்ரீசைலமாகும். அனைத்து ஆத்மாக்களின் தந்தையான பரமாத்மா தன் குழந்தைகளாகிய ஜீவாத்மாக்களுக்கு தன்னுடைய உண்மையான ஜோதி சொரூபத்தை உணர வைத்து
- Published in Article – List
நாடகத்தின் மறுபக்கம் பற்றி ஓரு சிந்தனை !
நன்றி: சங்கமயுகம் எல்லையில்லா இவ்வுலக நாடக மேடையில் நடைபெறும் மகாலீலையின் காட்சியை நாம் காண்கிறோம். நாடகத்தின் பாத்திரமான நடிகர்கள் அனைவரும் மேடையின் திரைச்சீலைக்குப் பின்புறம் ஏற்கனவே வந்து விட்டனர். மேடையில் யார் எப்பொழுது என்னவாக நடிக்க வேண்டும் என்பது முறைப்படி நடக்கிறது. தீர்மானிக்கப்பட்ட வேறு வேடத்தில் நடிப்பதற்கு தயார் செய்வதற்காக மீண்டும் திரைக்குப் பின் நடிகர் செல்கின்றார். ஆரம்பகால முதலே நடிப்பில் ஆர்வம் கொண்டு அநேகவித கரடு முரடான, மென்மையான அனுபவங்களை வாழ்க்கையில் சந்திக்கின்றனர். பழிக்குப்பழி, வஞ்சகம்,
- Published in Article – List
உலகை மாற்றுவதற்கான பத்து வழிகள் !
உலகில் தற்போது கவலையளிக்கும் நிலை என்பது எதனால் ஏற்பட்டுள்ளது ? அதற்கான காரணம் என்ன ? மனிதர்களாகிய நம்முடைய கடந்தகால செயல்களினால் ஏற்பட்ட பலனாகும். தற்போது நாம் எதிர்கொள்ளும் சவால்கள், தொழில்நுட்பம் மற்றும் அரசியல் தீர்வுகளும் போதுமானதல்ல என நாம் உணர்கிறோம். இதுவே இதற்கு காரணம் ஆகும்.எப்போழுது நாம் நம்மோடும், மற்றவர்களோடும் இயற்க்கையோடும் உள்ள உறவு முறையில் மாற்றம் கொண்டு வருகிறோமோ அப்பொழுது மட்டுமே ”இந்த உலகம் மாறும் ”. நாம் நம் மனதை மாற்றுவதன் மூலமும்,
- Published in Article – By Points
விநாடியில் ஜுவன்முக்தி
– பி.கு.பாலாஜி, பிரம்மா குமாரிகள், புதுக்கோட்டை விருகபுரி என்ற இயற்கை வளம் நிறைந்த நாட்டை விஷ்ணுவர்தன் என்ற மன்னர் சீரும், சிறப்புமாக ஆட்சி செய்து வந்தார். நாட்டு மக்கள் நலமுடன், வளமுடன் வாழ வேண்டும் என்ற குறிக்கோளுடன் மன்னர் ஆட்சி செய்து வந்தார். அவரது மக்களும் அவ்வாறே வாழ்ந்து வந்தனர். இருப்பினும் மன்னருக்கு வெகு காலமாக ஒரு மனக்குறை இருந்து வந்தது. தனக்குப் பின் தனது நாட்டை ஆள்வதற்கு ஒரு ஆண் வாரிசு இல்லையே என்பது தான்
- Published in Article – By story
நன்றி: The World Renewal, Magazine நமது இந்தியா ஒரு காலத்தில் உண்மை மற்றும் மகிழ்ச்சியின் இருப்பிடமாக இருந்தது.தங்கச் சிட்டுக் குருவியாக இருந்த நம் பாரதம், இப்பொழுது துயரத்தின் இருப்பிடமாக மாறி விட்டது. இந்தத்துயரத்திற்க்குக் காரணம், நாம், நம்சுய நினைவுகளை இழந்து ”காமம், கோபம், பொறாமை, மற்றும் பேராசை” என்னும் வலையில் சிக்கியதே ஆகும். அப்படி இந்த துக்கம் நிறைந்த இந்த பூமியை “சொர்க்க பூமியாக” மாற்றுவதற்க்காத்தான் நமது “ஞானக்கடல்”, “பரம தந்தை,பரமாத்மா” நம்மை மாற்றி, ஓர் உன்னதமான
- Published in Article – List
உயர்வாக இரு
நன்றி: The World Renewal, Magazine ஒரு ஊரில் ஒரு பெரிய கோவிலில் நிறைய புறாக்கள், வாழ்ந்து வந்தன. திடீரென்று, கோயிலின் திருப்பணி நடந்தது. அதனால், அங்கு வாழ்ந்த புறாக்கள் வேறு இடம் தேடிப்பறந்தன. வழியில், ஒரு தேவாலயத்தைக்கண்டன. அங்கு சில புறாக்கள் இருந்தன. அவைகளோடு இந்தப்புறாக்களும் அங்கு குடியேறின.சில நாட்கள் கழித்து, கிருஸ்துமஸ் வந்தது. தேவாலயம் புதுப்பிக்கத்தயாரானது. இப்போது, இங்கு இருந்து சென்ற பறவைகளும், அங்கு இருந்த பறவைகளும் வேறு இடம் தேடிப்பறந்தன. வழியில், ஒரு மசூதியைக்கண்டன
- Published in Article – By story











